செய்திகள்
கோப்புபடம்

பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2020-10-24 16:04 GMT   |   Update On 2020-10-24 16:04 GMT
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:

பொன்னமராவதி பேரூராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கேட்ட சுகாதார மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. நகர துணை செயலாளர் பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பேரூராட்சி செயல்அலுவலரை தகாத வார்த்தையில் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக செயல் அலுவலர் தனுஷ்கோடி போலீசில் கொடுத்துள்ளார். மேலும் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மேஸ்திரி பழனிச்சாமி பஸ் நிலையம் அருகே சந்தை வீதியில் பணி செய்து கொண்டிருந்தபோது, தன்னை கல்லால் அடித்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவரும் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டிருந்த பன்னீர்செல்வத்தை பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News