செய்திகள்
கைது

பந்தலூரில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

Published On 2020-10-23 05:42 GMT   |   Update On 2020-10-23 05:42 GMT
பந்தலூரில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பந்தலூர்:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவளை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, அவளது அக்காள் கணவரான மணிகண்டன்(வயது 38) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்...

இதேபோன்று பந்தலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கூடலூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்தாள். அப்போது அவளை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(19) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.
Tags:    

Similar News