செய்திகள்
தற்கொலை

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2020-10-20 04:51 GMT   |   Update On 2020-10-20 04:51 GMT
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சுபம் நகர், சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 23). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா (23) என்பவரை சுமார் 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. பின்னர் இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். வெங்கடேசன் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

ஸ்டெல்லாவுக்கு அடிக்கடி தீராத தலைவலி ஏற்பட்டு வந்ததாகவும், இதற்காக மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சமீப காலமாக அவர் தீராத மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

நேற்று காலையும் அவருக்கு தலைவலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஸ்டெல்லா, தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்டெல்லாவுக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News