செய்திகள்
அபராதம்

முககவசம் அணியாத 307 பேருக்கு அபராதம்

Published On 2020-10-19 07:30 GMT   |   Update On 2020-10-19 07:30 GMT
நாமக்கல் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 307 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போலீசார் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 307 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.61 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News