செய்திகள்
கைது

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2020-10-17 06:53 GMT   |   Update On 2020-10-17 06:53 GMT
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடையார்பாளையம் வாத்திபடையாச்சி தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 55), வெள்ளாழத்தெருவை சேர்ந்த ராஜாராம்(52), திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த மோகன்(47) ஆகிய 3 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News