செய்திகள்
விளாங்குடியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராம்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டன உரையாற்றினார். தலைமைக் கழக பிரதிநிதி சைதை.குணசேகரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.