செய்திகள்
ரெயில்

சென்னை சென்ட்ரல்-கோவை ரெயில் வழக்கமான நேரத்தில் இயக்கம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2020-10-14 04:21 GMT   |   Update On 2020-10-14 04:21 GMT
பராமரிப்பு பணி ரத்து காரணமாக சென்னை சென்ட்ரல்- கோவை ரெயில் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து கோவைக்கும் (வண்டி எண்: 02679) மற்றும் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (02676) இயக்கப்படும் ரெயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டதால், மேற்கண்ட ரெயில்கள் வழக்கமான நேரத்தில் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும். அதாவது சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்கும் புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News