செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா சாலிவாரம் அருகே உள்ள பேலாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சியப்பா (வயது 67). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆஞ்சியப்பாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.