செய்திகள்
தள்ளுவண்டி கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது
ஈரோடு அருகே தள்ளுவண்டி கடையில் மது அருந்த அனுமதித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் வைராபாளையம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் தள்ளுவண்டி கடையில் வைத்து சிலர் மது அருந்திக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பதும், அவர் தனது கடையில் சிலரை மது அருந்த அனுமதித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.