செய்திகள்
கைது

குடியாத்தத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2020-10-12 10:25 GMT   |   Update On 2020-10-12 10:25 GMT
குடியாத்தத்தில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் சுடுகாடு பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.
Tags:    

Similar News