செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே 16 வயது சிறுமியை காணவில்லை என அந்த சிறுமியின் தந்தை கடந்த 5-ந்தேதி வேளாங்கண்ணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாகை பஸ் நிறுத்தத்தில் சிறுமியுடன், 17 வயது சிறுவன் ஒருவன் பேசி கொண்டு இருப்பதை வேளாங்கண்ணி போலீசார் பார்த்தனர்.
பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவனும், சிறுமியும் பழகி வந்ததும், சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.