செய்திகள்
கோப்புபடம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

Published On 2020-10-11 15:57 GMT   |   Update On 2020-10-11 15:57 GMT
அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வெள்ளையன், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வெள்ளையன் தளவாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், வெள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News