செய்திகள்
கைது

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2020-10-11 14:02 IST   |   Update On 2020-10-11 14:02:00 IST
மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை ரெயில்வே கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து ¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News