செய்திகள்
கொரோனா பரிசோதனை

வடகரை, வலிவலம் ஊராட்சிகளில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-10-11 13:51 IST   |   Update On 2020-10-11 13:51:00 IST
கீழ்வேளூர் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு தலைமையில் டாக்டர் சந்திரமவுலி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 97 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஊராட்சி துணை தலைவர் சிவசக்தி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மாதவன், அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வலிவலம் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு தலைமையில் டாக்டர் சந்திரமவுலி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 210 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஊராட்சி துணை தலைவர் இலக்கியா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் அருண்குமார் மற்றும் அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News