செய்திகள்
விசாரணை

பொதுமக்களின் புகார் தொடர்பாக வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தும் போலீசார்

Published On 2020-10-10 08:25 GMT   |   Update On 2020-10-10 08:25 GMT
மானாமதுரை பகுதியில் புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் மானாமதுரை பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களை போலீஸ் நிலையத்திற்கு வந்து அலையவிடாமல் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கே சென்று போலீசார் விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மற்றும் போலீசார் போலீஸ் நிலைத்திற்கு வந்து புகார் கொடுத்த பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களின் தரப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பொதுமக்கள் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News