செய்திகள்
பொதுமக்கள்- கடைக்காரர்களுக்கு இலவச முககவசம் வழங்கிய போலீசார்
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் மற்றும் கடைவீதியில் உள்ள கடைக்காரர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இலவசமாக முக கவசம் வழங்கி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், வெளியில் செல்லும்போது முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றக்கூடாது. பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது. காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடாது என்று சாலை விதிமுறைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.