செய்திகள்
மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை வடபாதி தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் துஷ்யந்திரன் (வயது 50). தச்சுதொழிலாளி. இவர் மூவலூர் தெற்குத்தெரு சித்தார்த்தன் என்பவரது வீட்டில் கடந்த 5 நாட்களாக சோபா செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த 6-ந் தேதி வேலை செய்யும் போது மரம் அறுக்கும் எந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்த துஷ்யந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து அவரது மனைவி ராணி (45) கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.