செய்திகள்
கோப்புபடம்

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி பம்ப் ஆப்ரேட்டர் பலி

Published On 2020-10-08 15:15 IST   |   Update On 2020-10-08 15:15:00 IST
உத்திரமேரூர் அருகே பம்ப் ஆப்ரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த காவணிப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). இவர் காவணிப்பாக்கம் பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் குடிநீர் வினியோகம் செய்ய சென்றபோது மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News