செய்திகள்
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் வேகவதி ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக முசரவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 44) என்பவரை பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு கைது செய்தார். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை போலீசார் கைப்பற்றினர்.