செய்திகள்
பாகூர் அருகே தாய் இறந்த வேதனையில் மகன் தற்கொலை
பாகூர் அருகே தாய் இறந்த வேதனையில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
பாகூரை அடுத்த மேல் பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 74). இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன்கள் அருண்குமார் (37), சாம்ராஜ் (33). இதில் அருண்குமார் திருமணமாகி குடும்பத்துடன் உள்ளார். சாம்ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாயார் சாந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துபோனார். தாய் இறந்ததில் இருந்து சாம்ராஜ் சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அப்பகுதியில் உள்ள களத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் விரைந்து சென்று சாம்ராஜை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்த வேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பாகூரை அடுத்த மேல் பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 74). இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன்கள் அருண்குமார் (37), சாம்ராஜ் (33). இதில் அருண்குமார் திருமணமாகி குடும்பத்துடன் உள்ளார். சாம்ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாயார் சாந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துபோனார். தாய் இறந்ததில் இருந்து சாம்ராஜ் சரியாக சாப்பிடாமல் மன வேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அப்பகுதியில் உள்ள களத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் விரைந்து சென்று சாம்ராஜை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்த வேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.