செய்திகள்
குந்தலாடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
குந்தலாடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குந்தலாடி அருகே உள்ள கடலைக்கொல்லி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் கரியன். இவரது மகன் அனீஸ்(வயது 20). இவர் கொளப்பள்ளியில் இருந்து பாட்டவயல் செல்லும் இணைப்பு சாலையில் உள்ள பாலவயல் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.