செய்திகள்
கோப்பு படம்.

பாகூர் அருகே பணியில் இருந்த சுகாதார துறை ஊழியர் திடீர் மரணம்

Published On 2020-10-04 01:07 GMT   |   Update On 2020-10-04 01:07 GMT
பாகூர் அருகே பணியில் இருந்த சுகாதார துறை ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:

புதுச்சேரி மாநிலம் பாகூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 27). புதுச்சேரி சுகாதார துறையில் தற்காலிக ஊழியரான இவர் குருவிநத்தம் துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல் அரவிந்தன் பணிக்கு சென்றுள்ளார். காலை 9 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அரவிந்தன் திடீரென இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News