செய்திகள்
புதுச்சேரியில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,544 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 80 ஆயிரத்து 472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்து 25 ஆயிரத்து 674 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,179 ஆகும். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கையும் 97,497 ஆக அதிகரித்து இருக்கிறது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 40 ஆயிரத்து 471 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 51 லட்சத்து 87 ஆயிரத்து 826 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,544 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.