செய்திகள்
கோப்பு படம்.

நாகை அருகே மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயம்

Published On 2020-09-19 08:15 GMT   |   Update On 2020-09-19 08:15 GMT
நாகை அருகே மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கல்:

நாகை அருகே உள்ள சிக்கல் கிராமத்துக்கு சங்கமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பிரதான டிரான்ஸ்பார்மர் முலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை கீழவீதியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள சுவரில் வளர்ந்துள்ள அரசமரக்கிளைகள் வழியாக சென்ற மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடப்பது தெரியாமல் தனது வீட்டில் இருந்து சாந்தி(வயது40) என்பவர் வெளியே வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் சாந்தியின் கை பட்டது.

இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதைக்கண்ட அருகில் வசித்து வந்த விஜயலெட்சுமி மற்றும் வசந்தா ஆகியோர் சாந்தியை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (தெற்கு) பாலாஜி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News