செய்திகள்
சீர்காழி அருகே குண்டர் சட்டத்தில் சாராய பெண் வியாபாரி கைது
சீர்காழி அருகே பல்வேறு சாராய வழக்குகளில் தொடர்புடைய பெண் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை:
சீர்காழி அருகே உள்ள வள்ளுவக்குடி பாதரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரை மனைவி செல்வி(வயது 45). சாராய வியாபாரியான இவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல சாராய வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஆகியோர் செல்வியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயருக்கு பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து செல்வியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் செல்வி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதன் நகலை திருச்சி மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.