செய்திகள்
தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2020-09-16 18:26 IST   |   Update On 2020-09-16 18:26:00 IST
காரைக்கால் அருகே மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக, இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மாரிமுத்து நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News