செய்திகள்
நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கரூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கரூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.