செய்திகள்
குன்னூரில் வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் மீது வழக்கு
குன்னூரில் வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
குன்னூர் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமுதாயம் பற்றியும், அந்த மக்களின் வாழ்வியலை பற்றியும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார்.
தற்போது இந்த பதிவேற்றம் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த அந்த சமூக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அந்த சமூகத்தை சேர்ந்த 5 அமைப்புகள், வக்கீல் சுப்பிரமணி ஆகியோர் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சாதி பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
அதன்பேரில் குன்னூர் போலீசார் உமா சங்கர் மீது அவதூறு பரப்புதல், பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
குன்னூர் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமுதாயம் பற்றியும், அந்த மக்களின் வாழ்வியலை பற்றியும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார்.
தற்போது இந்த பதிவேற்றம் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த அந்த சமூக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அந்த சமூகத்தை சேர்ந்த 5 அமைப்புகள், வக்கீல் சுப்பிரமணி ஆகியோர் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சாதி பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
அதன்பேரில் குன்னூர் போலீசார் உமா சங்கர் மீது அவதூறு பரப்புதல், பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.