செய்திகள்
ஆர்ப்பாட்டம்

பூதலூரில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-09 18:32 IST   |   Update On 2020-09-09 18:32:00 IST
பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக்கோரி பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக்கோரி பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், நாகராஜ், துரைசாமி, ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News