செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மது விற்ற 5 பேர் கைது

Published On 2020-09-09 11:28 GMT   |   Update On 2020-09-09 11:28 GMT
ராமநாதபுரம் அருகே மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 94 மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்ய பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News