செய்திகள்
மின்தடை

கீழ்பென்னாத்தூரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-09-07 09:04 GMT   |   Update On 2020-09-07 09:04 GMT
கீழ்பென்னாத்தூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மின் நிலையத்தை சேர்ந்த கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், வேடநத்தம், கரிக்கலாம்பாடி, வழுதலங்குணம், சிறுநாத்தூர், கணியாம்பூண்டி, குண்ணங்குப்பம், கல்பூண்டி, தள்ளாம்பாடி, மேக்களூர், கத்தாழப்பட்டு, ஆராஞ்சி, சோமாசிபாடி, காட்டுகுளம், சிங்கவரம், கழிக்குளம், கெங்கனந்தல் உள்பட 32 ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் மு.ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News