செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னை போலீசில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-07 03:24 IST   |   Update On 2020-09-07 03:24:00 IST
சென்னை போலீசில் நேற்று மட்டும் 11 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
சென்னை:

சென்னை போலீசில் நேற்று மட்டும் 11 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 302 ஆக உயர்ந்தது. தீவிர சிகிச்சையின் பலனாக நேற்று 10 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள்.

இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,921 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

Similar News