செய்திகள்
கோப்புபடம்

தேன்கனிக்கோட்டையில் கஞ்சா விற்ற முதியவர் கைது

Published On 2020-09-05 12:10 IST   |   Update On 2020-09-05 12:10:00 IST
தேன்கனிக்கோட்டையில் கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் தொட்டமஞ்சு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு முதியவர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் காலிகுட்டை கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 60) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News