செய்திகள்
வழக்கு

காரைக்குடியில் ஊரடங்கு விதிகளை மீறும் வர்த்தகர்கள் மீது வழக்கு

Published On 2020-08-23 16:15 IST   |   Update On 2020-08-23 16:15:00 IST
காரைக்குடியில் ஊரடங்கு விதிகளை மீறும் வர்த்தகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி:

காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவல் அதிகமான காரணத்தால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தினமும் வணிகர்கள் தங்களது வர்த்தக நிறுவனங்களை இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்க அனுமதித்துள்ளது. ஆனால் காரைக்குடி நகரில் பெரும்பாலான வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் விதிகளை மீறி தங்களது வர்த்தக நிறுவனங்களை இரவு 7 மணிக்கும் மேலாக திறந்து வைத்திருப்பதாக போலீசார் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு விதிமுறைகளை மீறி வர்த்தக நிறுவனங்களை திறந்து வைக்கக்கூடாது. இதனை பின்பற்றாத வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News