செய்திகள்
கோப்பு படம்.

செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2020-08-19 14:58 IST   |   Update On 2020-08-19 14:58:00 IST
செங்கல்பட்டு அருகே ஏரியில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சையத் ரஷீத் பாஷா (வயது 20). செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் அவர் அருகில் உள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத அவர் ஏரியில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் இது குறித்து செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் வந்து சையத் ரஷீத் பாஷாவை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News