செய்திகள்
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கடலை பயிரிட்டு அசத்தல்
சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான கிணற்று பாசனத்துடன் கூடிய நிலத்தை வாங்கி அதில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கடலை செடி பயிரிட்டு பராமரிக்க தொடங்கினர்.
காரைக்குடி:
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தது மட்டுமல்லாமல் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பும் பறிபோனது. இதுதவிர பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்து வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் சில கிராமங்களில் வீட்டில் இருந்தபடியே கூடை முடைவது, பெட்டிகள் தயாரிப்பது உள்ளிட்ட சிறுதொழில்கள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இன்னும் சில கிராமத்தில் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான கிணற்று பாசனத்துடன் கூடிய நிலத்தை வாங்கி அதில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கடலை செடி பயிரிட்டு பராமரிக்க தொடங்கினர்.
தற்போது இந்த செடிகள் எல்லாம் விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுமார் 6 ஏக்கர் வரை உள்ள நிலத்தில் இந்த செடிகளை பயிரிட்டு சுமார் 20 டன் வரை கடலை அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கடலை செடிகளை பிரித்தெடுக்கும் பணியிலும், அவற்றை வெயிலில் காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கடலை செடிகளை பயிரிட்டுள்ளோம். தற்போது இந்த செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்ததால் தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கிணற்று பாசனம் மூலம் விளைந்த இந்த கடலை செடிகளில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் விளைச்சல் சற்று குறைந்துள்ளது. மேலும் இங்கு அறுவடை செய்யப்பட்ட இந்த கடலை விற்பனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட உள்ளது” என்றனர்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தது மட்டுமல்லாமல் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பும் பறிபோனது. இதுதவிர பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்து வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் சில கிராமங்களில் வீட்டில் இருந்தபடியே கூடை முடைவது, பெட்டிகள் தயாரிப்பது உள்ளிட்ட சிறுதொழில்கள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இன்னும் சில கிராமத்தில் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல் அங்குள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான கிணற்று பாசனத்துடன் கூடிய நிலத்தை வாங்கி அதில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கடலை செடி பயிரிட்டு பராமரிக்க தொடங்கினர்.
தற்போது இந்த செடிகள் எல்லாம் விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சுமார் 6 ஏக்கர் வரை உள்ள நிலத்தில் இந்த செடிகளை பயிரிட்டு சுமார் 20 டன் வரை கடலை அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கடலை செடிகளை பிரித்தெடுக்கும் பணியிலும், அவற்றை வெயிலில் காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கடலை செடிகளை பயிரிட்டுள்ளோம். தற்போது இந்த செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்ததால் தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கிணற்று பாசனம் மூலம் விளைந்த இந்த கடலை செடிகளில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் விளைச்சல் சற்று குறைந்துள்ளது. மேலும் இங்கு அறுவடை செய்யப்பட்ட இந்த கடலை விற்பனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட உள்ளது” என்றனர்.