செய்திகள்
சாக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை
சாக்கோட்டை பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்ராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் (பகிர்மானம்) ஜான்சன் கூறினார்.