செய்திகள்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சான்றுபெற விண்ணப்பிக்கலாம்

Published On 2020-08-15 10:45 GMT   |   Update On 2020-08-15 10:45 GMT
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சான்றுபெற இணைய தள முகவரியில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 2020-21-ம் கல்வியாண்டில் முன்னாள் படை வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி மேல் படிப்பில் சேர சான்று தேவைப்படுவோர் இணைய தள முகவரியில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் முன்னாள் படைவீரர் இட ஒதுக்கீடு கட்டத்தில் தேர்வு செய்து முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சான்றின் நகலை கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும். கலந்தாய்வின்போது அசல் சான்றை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின்படி படிப்பில் சேருபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் உரிய விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04575-240483 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News