செய்திகள்
கொரோனா வைரஸ்

4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Published On 2020-08-15 07:49 GMT   |   Update On 2020-08-15 07:49 GMT
கூடலூர் மற்றும் அத்திக்குன்னாவில் 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கூடலூரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், சிறுவன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி கூடலூர் ஹெல்த்கேம்ப் போலீஸ் குடியிருப்பில் 8 வீடுகளும், பள்ளிப்பாடியில் 15 வீடுகளும், ஸ்ரீமதுரை ஊராட்சி கலிக்குன்னு பகுதியில் 4 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 103 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. 

பின்னர் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல் பந்தலூர் தாலுகா அத்திக்குன்னாவில் 17 வயது சிறுவனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அத்திக்குன்னா தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 47 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 192 பேரிடம் சளிமாதிரி சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் சாலைகளையும் போலீசார் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைத்து சீல் வைத்தனர். பின்னர் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீனாசைமன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் ஆகியோர் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Tags:    

Similar News