செய்திகள்
புகார்

வங்கி அதிகாரிபோல் பேசி ரூ.68 ஆயிரம் மோசடி- தொழிலாளி புகார்

Published On 2020-07-15 15:25 GMT   |   Update On 2020-07-15 15:25 GMT
வங்கி அதிகாரிபோல் பேசி ரூ.68 ஆயிரம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:

சிவகிரி தாண்டாம்பாளையம் மடத்துநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனக்கு சிவகிரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி எனது செல்போனுக்கு ஒருவர் தொடர்புகொண்டு, வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதேபோல் எனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது. எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Tags:    

Similar News