செய்திகள்
முகநூலில் ஆர்.எஸ்.எஸ். பற்றி அவதூறு கருத்து - தி.மு.க. பிரமுகர் மீது பா.ஜ.க.வினர் புகார்
முகநூலில் ஆர் எஸ் எஸ் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவு செய்த திமுக பிரமுகர் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி என்பவர் தனது முகநூலில் (பேஸ்புக்) சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளை சாத்தான்குளம் வழக்குகளுடன் தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை பதிவு செய்து உள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.