செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவே வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-07-10 09:00 GMT   |   Update On 2020-07-10 09:00 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும். அதற்கு 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தற்போது அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை 718 பேர் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விடுபட்ட 34,842 மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும், அதற்கான ஏற்பாடுகள் செய்து தர அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
Tags:    

Similar News