செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தபோது எடுத்தபடம்.

கொணவக்கரை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

Published On 2020-07-06 10:10 GMT   |   Update On 2020-07-06 10:10 GMT
கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொணவக்கரை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோத்தகிரி:

கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொணவக்கரை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், ஊராட்சி துணை தலைவர் சுப்பிரமணி, செயலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News