செய்திகள்
முதியவர் தற்கொலை

பண்ருட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-07-04 12:12 GMT   |   Update On 2020-07-04 12:12 GMT
பண்ருட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள அரசடிக்குப்பம் மேற்கு தெருவில் வசித்து வந்தவர் கமலநாதன் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கமலநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News