செய்திகள்
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்

எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்

Published On 2020-07-03 13:24 GMT   |   Update On 2020-07-03 13:24 GMT
விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருத்தாசலம்:

விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள், முல்லை நகரில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் டாக்டர் டேவிட், சிவக்குமார், பார்த்தசாரதி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News