செய்திகள்
கடைகளுக்கு சீல்

காரைக்காலில் ஊரடங்கை மீறிய 4 கடைகளுக்கு சீல்

Published On 2020-07-01 17:50 IST   |   Update On 2020-07-01 17:50:00 IST
காரைக்காலில் ஊரடங்கை மீறியதாக 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக காலை 6 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கவேண்டும். அனைத்து கடைகளும் சமூக இடைவெளி, முககவசத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறினால் அபராதம் மற்றும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காரைக்கால் பாரதியார் வீதியில் ஊரடங்கை மீறியதாக 2 கடைகளை காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் பணியாளர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அதேபோல் காரைக்கால் பாரதியார் வீதியில் ஊரடங்கை மீறியதாக 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Similar News