செய்திகள்
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-01 09:53 GMT   |   Update On 2020-07-01 09:53 GMT
நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோவிந்தராசன், மாவட்ட துணைத்தலைவர் பாலகுரு, செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

ரூ.50 லட்சத்திற்கான மருத்துவ குழு காப்பீட்டுத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மற்றொரு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கோபால் நன்றி கூறினார்.
Tags:    

Similar News