செய்திகள்
காங்கிரஸ்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-01 08:05 GMT   |   Update On 2020-07-01 08:05 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தது.
ஈரோடு:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடந்தது. கொடுமுடி வட்டாரம் ஒத்தக்கடை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். கொடுமுடி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான ஆர்.எம்.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.பி.பாலசுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை கண்டித்தும், உடனடியாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் வேம்பரசன், மாவட்ட செயலாளர்கள் கோபால், பிரபு, கொடுமுடி பேரூராட்சி தலைவர் பாபு, சென்னசமுத்திரம் பேரூராட்சி பெரியசாமி, இச்சிபாளையம் ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம், ரங்கசாமி, கந்தசாமி, சின்னச்சாமி, வெங்கம்பூர் துரை, கொடுமுடி அப்பாஸ், தாமரைபாளையம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News