செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-07-01 06:16 GMT   |   Update On 2020-07-01 06:16 GMT
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை 1 முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News