செய்திகள்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது- முத்தரசன்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் செசன்சு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதில் 6 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. சிலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் மேல்முறையீடு செய்த போது அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு மிகவும் கவலைக்குரிய, முகம் சுழிக்கக்கூடிய தீர்ப்பாகும். இது நாகை நீதிமன்றம் கீழவெண்மணி குற்றவாளிகளுக்கு வழங்கிய தீர்ப்பு, மேல்முறையீடு செய்த போது தண்டனை ரத்து செய்யப்பட்டது போல் உள்ளது. எனவே உடுமலை சங்கர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தவேண்டும்.
சாத்தான்குளம் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே தந்தை, மகன் கொலை செய்யப்பட்டதில் சம்பந்தபட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் உண்மையை மறைப்பதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு சம்பவம் எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை என்றால் தான் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அனைத்தும் வெளிப்படையாக தெரியும் போது ஏன் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இது காலதாமதம் செய்யும் செயலாகும்.
காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது தன்னிச்சையாக செயல்படுகிறதா? என்று தெரியவில்லை. கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது. இதற்கு பதிலாக மருத்துவ பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக முதல்-அமைச்சரோ கொரோனாவில் தன்னிச்சையாக செயல்படுகிறார். சிறப்பாக செயல்படுகிறோம் என தொடர்ந்து கூறிவருகிறார். சிறப்பாக செயல்பட்டால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அரசியல் கட்சியினர் தெரிவித்த எந்த கருத்தையுமே அவர் கேட்கவில்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட்டதால் வைரஸ் தொற்று அதிகமாகிவிட்டது.
கடந்த ஆண்டு வந்த தண்ணீர் தான் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான தண்ணீர் இன்னும் வரவில்லை. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை சென்று விட்டதாக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் தண்ணீர் கடைமடை வந்து சேரவில்லை என்று விவசாயிகள் கூறி போராட்டங்கள் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செல்வராசு எம்.பி., மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் செசன்சு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதில் 6 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. சிலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் மேல்முறையீடு செய்த போது அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு மிகவும் கவலைக்குரிய, முகம் சுழிக்கக்கூடிய தீர்ப்பாகும். இது நாகை நீதிமன்றம் கீழவெண்மணி குற்றவாளிகளுக்கு வழங்கிய தீர்ப்பு, மேல்முறையீடு செய்த போது தண்டனை ரத்து செய்யப்பட்டது போல் உள்ளது. எனவே உடுமலை சங்கர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தவேண்டும்.
சாத்தான்குளம் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே தந்தை, மகன் கொலை செய்யப்பட்டதில் சம்பந்தபட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் உண்மையை மறைப்பதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்வதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு சம்பவம் எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை என்றால் தான் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு அனைத்தும் வெளிப்படையாக தெரியும் போது ஏன் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இது காலதாமதம் செய்யும் செயலாகும்.
காவல்துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது தன்னிச்சையாக செயல்படுகிறதா? என்று தெரியவில்லை. கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது. இதற்கு பதிலாக மருத்துவ பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது தான் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக முதல்-அமைச்சரோ கொரோனாவில் தன்னிச்சையாக செயல்படுகிறார். சிறப்பாக செயல்படுகிறோம் என தொடர்ந்து கூறிவருகிறார். சிறப்பாக செயல்பட்டால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அரசியல் கட்சியினர் தெரிவித்த எந்த கருத்தையுமே அவர் கேட்கவில்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட்டதால் வைரஸ் தொற்று அதிகமாகிவிட்டது.
கடந்த ஆண்டு வந்த தண்ணீர் தான் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான தண்ணீர் இன்னும் வரவில்லை. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை சென்று விட்டதாக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் தண்ணீர் கடைமடை வந்து சேரவில்லை என்று விவசாயிகள் கூறி போராட்டங்கள் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செல்வராசு எம்.பி., மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.